
ஐசிசி நடத்தம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்தவகையில், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் இத்தொடரில் மோதும் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆனால் இத்தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ள காரணத்தால் இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தது. ஆனால் நாளடைவில் தற்சமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி வருகின்றன.
ஆனால் இந்திய அணி அரசிய சூழ்நிலையைக் காரணம் காட்டி 2009ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாம், ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்தவகையில் இவ்விரு அணிகளுகும் மோதும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக பார்கப்படுகிறது.