-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நாளை மெல்போர்னில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3ஆவது முறையாகும். இதற்கு முன் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே சமயம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் தான் வென்றது.