
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
முதல் சுற்றிலிருந்து இருந்து இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பது குறித்த முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை பலபரீட்சை நடத்துகின்றன. அதன்படி கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.