
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிரடியான தொடக்கத்தைக் கொடித்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துகொடுத்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனை குல் ஃபெரோசா 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலியும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்ரா அமீன் 28 ரன்களுக்கும், நிதா தர் 29 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஃபாத்திமா சனா 37 ரன்களையும், அலியா ரியாஸ் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டஸ்மின் பிரிட்ஸ் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து லாரா வோல்வார்ட்டும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.