Advertisement
Advertisement
Advertisement

பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் - சவுரவ் கங்குலி உறுதி!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 03, 2022 • 14:46 PM
Pink Ball Test Between India & Sri Lanka To Be Hosted At Bangalore, Confirms Sourav Ganguly
Pink Ball Test Between India & Sri Lanka To Be Hosted At Bangalore, Confirms Sourav Ganguly (Image Source: Google)
Advertisement

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் பிப்ரவரி 25ஆம் தேதியும், 20 ஓவர் தொடர் மார்ச் 16ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

டெஸ்ட் போட்டிகள் பெங்களூர், மொகாலியிலும், 20 ஓவர் போட்டிகள் மொகாலி, தர்மசாலா, லக்னோவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Trending


இந்த நிலையில் கரோனா பாதுகாப்பு காரணமாக முதலில் 20 ஓவர் போட்டிகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மசாலா மற்றும் மொகாலியில் மட்டும் 20 ஓவர் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லக்னோவில் போட்டி நடத்தப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.

மேலும் 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று உறுதிசெய்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஆம், பகலிரவு டெஸ்ட் பெங்களூரில் நடக்கிறது. இலங்கை தொடருக்கான அனைத்து இடங்களையும் நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் அது விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement