
ஏற்கனவே கடந்த ஒரு வருட இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டி போட்ட கரோனா வைரஸின், இரண்டாம் அலை தற்போது உலகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் கரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
கரோனாவின் கோர தாண்டவத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வரும் நிலையில், தற்போது அதை விட மிகப்பெரும் பிரச்சனையாக ஆக்ஷிஜன் பற்றாக்குறையும் நாடு முழுவதும் ஒலித்து வருகிறது. கரோனாவை விட ஆக்ஷிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து விடுமோ என்று அச்சப்படும் அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகப் பெரும் குழப்பத்தில் இருப்பதை அனைவரும் கண் கூடாக பார்த்து வருகிறோம்.
இருப்பினும் கரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பாக நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வைரஸ் தொற்று வீரர்களை தாக்கியதை தொடர்ந்து பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.