Advertisement

தி ஹண்ரட் : வீரர்களுக்கு புதிய நெறிமுறைகள் !

தி ஹண்ரட் தொடரில் விளையாடும் வீரர்கள் நெறிமுறைகளை பின்பற்றி பொதுவெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாம் ஹேரிசன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 18, 2021 • 13:20 PM
Players Told To Avoid Pubs & Restaurants Ahead Of The Hundred
Players Told To Avoid Pubs & Restaurants Ahead Of The Hundred (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இத்தொடரில் பங்கேற்க எல்லீஸ் பெர்ரி உள்ளிட்ட 11 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் உள்பட 24  வெளிநாட்டு வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். 

Trending


இதில் இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா ஆகியோர் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக வீரர்கள் யாரும் பொது இடங்களுக்கு தேவையின்றி பயணிப்பதை தவிர்க்க வேண்டுமென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இசிபியின் தலைமை செயல் அதிகாரி டாம் ஹேரிசன் கூறுகையில்,“இந்தியா தொடரை நாங்கள் பாதுகாக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேசமயம் தி ஹண்ரட் தொடரின் விளையாடும் வீரர்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வது முக்கியம். 

ஆனால் அவர்களின் பயணம், தங்குமிடம்,வெளியே யாருடனும் நெருங்கிய தொடர்பு இல்லை என்பதை நாங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துவது. அதனால் அவர்களைச் சுற்றி கூடுதல் நெறிமுறைகளை வைக்க நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். 

அதேபோல் அவர்களும் எங்களது நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement