Players Wear Black Armbands: அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்த லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பயணிகள் மற்றும் விமானம் மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மணவர்கள் என 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பல நாட்டு பிரதமர்கள் உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். மேற்கொண்டு இன்றைய போட்டி தொடங்கும் முன்னார் வீரர்கள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியும் தங்களுடைய் இரங்கலை பதிவுசெய்தனர்.