
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய தலைமையை தேர்வு செய்வது குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டன. அதில் சவுரவ் கங்குலி மீண்டும் பிசிசிஐ தலைவராகவே நீடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்காத மற்ற உறுப்பினர்கள் 2ஆவது வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை. எனவே அவர் பதவின் காலம் முடிவது உறுதியாகியுள்ளது.
1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் அசத்திய ரோஜர் பின்னி தான் பிசிசிஐ-ன் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ளார். செயலாளராக மீண்டும் ஜெய் ஷா வே நீடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததால் எந்தவித தேர்தலும் இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.