
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கருத்து கூறிய நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி செய்ய வேண்டியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்திய கிரிக்கெட் அணியின் ஏ பி டிவில்லியர்ஸ் போல் சூரியகுமார் யாதவ் செயல்படுகிறார். ஏபி டிவில்லியர்ஸ் 360 டிகிரியில் ரன் குவிப்பார். அதேபோல் சூரிய குமார் யாதவும் ரன் அடித்து வருகிறார். சூரியகுமார் அடிக்கும் சில ஷாட்டுகள் எல்லாம் பிரமிக்கும் வகையில் இருக்கிறது.