
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டின் பெயரும் இடம்பிடித்திருந்தது.
இநிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அவர், ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளராக தொடர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், “இப்போது எனக்கு சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக செயல்படுவதற்கு உண்மையில் எனக்கு நெரம் இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருக்க வேண்டும் எனில் அதற்காக அதிக நேரத்தை செலுத்த வேண்டும்.