வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்பின் களமிறக்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 14 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
ஆனால் அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 5 ரன்களுக்கும், டோனவன் ஃபெரீரா 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஸ்டப்ஸுடன் இணைந்த பேட்ரிக் க்ரூகரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேட்ரிக் க்ரூகர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.