Advertisement
Advertisement
Advertisement

IND vs ENG : வாய்ப்பை இழக்கும் பிரித்வி, சூர்யா?

குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 27, 2021 • 22:24 PM
Prithvi Shaw And Suryakumar Yadav’s Travel Plans To England May Get Affected After Krunal Pandya Tes
Prithvi Shaw And Suryakumar Yadav’s Travel Plans To England May Get Affected After Krunal Pandya Tes (Image Source: Google)
Advertisement

இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்து, டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று நடப்பதாக இருந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியானது. அதன்விளைவாக, இன்று நடக்கவிருந்த 2ஆவது டி20 போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Trending


அதேசமயம் குர்னால் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 8 வீரர்களில், இங்கிலாந்துக்கு செல்லவிருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவும் அடக்கம்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் விலகிய நிலையில், அவர்களுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லவிருந்தனர்.

அவர்கள் இருவரையும் உள்ளடக்கிய புதிய அணியை நேற்று தான் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில், குர்னால் பாண்டியாவுக்கு கரோனா உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுவதால், அதில் பாசிட்டிவ் என்று முடிவு வரும் பட்சத்தில், அவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement