பிஎஸ்எல் 2022: மாலிக், தாலத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 186 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷ்வர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஸஸாய், லியாம் லிவிங்ஸ்டோன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து முகமது ஹரிஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சோயிப் மாலிக் - ஹுசைன் தாலத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 58 ரன்களில் சோயிப் மாலிக் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரூதர்ஃபோர்டும் ரன் ஏதுமின்றி வெளியேறினார். இறுதியில் பென் கட்டிங் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 36 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் பெஷ்வர் ஸால்மி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் நசீம் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now