
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர் அணிக்கு மிர்ஸா தஹிர் - ஃபகர் ஸமான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் மிர்ஸா தாஹிர் 30 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
பின்னர் வந்த அப்துல்லா ஷஃபிக் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், அஹ்சன் பாட்டி, சிக்கந்தர் ரஸா அன அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அப்துல்லா ஷஃபிக் அரைசதம் கடந்ததுடன், 8 பவுண்டர்ன், 2 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.