Advertisement
Advertisement
Advertisement

PSL 2023: முல்தான் சுல்தான்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை வென்றது லாகூர் கலந்தர்ஸ்!

முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 19, 2023 • 11:45 AM
PSL 2023: Lahore Qalandars beat Multan Sultans by just one run to defend their Pakistan Super League
PSL 2023: Lahore Qalandars beat Multan Sultans by just one run to defend their Pakistan Super League (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய லாகூர் அணிக்கு மிர்ஸா தஹிர் - ஃபகர் ஸமான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் மிர்ஸா தாஹிர் 30 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

Trending


பின்னர் வந்த அப்துல்லா ஷஃபிக் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், அஹ்சன் பாட்டி, சிக்கந்தர் ரஸா அன அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அப்துல்லா ஷஃபிக் அரைசதம் கடந்ததுடன், 8 பவுண்டர்ன், 2 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷஹீன் அஃப்ரிடி தனது பங்கிற்கு 15 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 44 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களைக் குவித்தது. முல்தான் அணி தரப்பில் உஸாமா மிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் உஸாமா மிர் 18 ரன்களிலும், மகமது ரிஸ்வான் 34 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த ரைலீ ரூஸோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதனைத்தொடர்ந்து வந்த கீரன் பொல்லார், டிம் டேவிட், குஷ்டில் ஷா, அன்வர் அலி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் அன்வர் அலி 6 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் முல்தான் சுல்தான்ஸ் அணியால் 199 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன்மூலம் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன்னில் முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத ஷாஹீன் அஃப்ரிடியும், தொடர்நாயகனாக இஹ்ஷானுல்லாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement