
பாகிஸ்தனைன் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் மேத்யூ வேட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டயூப் தாஹிர் 7 ரன்களிலும், காசிம் அக்ரம் 8 ரன்களிலும், ஷோயப் மாலில் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் ஆடம் ரோஸிங்டன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டஹ்னது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் இமாத் வாசிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் 45 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 69 ரன்களைச் சேர்த்த ரோஸிங்டன் விக்கெட்டை இழந்தார்.