Advertisement

பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!

கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 12, 2024 • 11:41 AM
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி!
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை பந்தாடியது பெஷாவர் ஸால்மி! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

இதில் சைம் அயூப் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸும் 13 ரன்களுக்கும், ஹசீபுல்லா கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்கள் எடுத்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழந்தனர். 

Trending


பின்னர் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் டேனியல் சாம்ஸ், ஸஹித் மஹ்மூத், அராஃபத் மின்ஹாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் 21 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூத்தும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் செய்ஃபெர்ட் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம அடிக்கும் வாய்ப்பை தவாறவிட்டார். 

பின்னர் இணைந்த சோயப் மாலிக் - இர்ஃபான் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் சோயப் மாலிக் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கீரென் பொல்லார்டும் ஒரு ரன்னில் தனது விக்கெட்டை இழந்தனர். இதில் இறுதிவரை போராடிய இர்ஃபான் கான் 39 ரன்களைச் சேர்த்த நிலையிலும் கராச்சி கிங்ஸ் அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெஷாவர் ஸால்மி அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பெஷாவர் ஸால்மி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் அடித்த பெஷாவர் ஸால்மி அணி கேப்டன் பாபர் ஆசாம் ஆட்டநாயகன் விருதை வென்றார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement