Advertisement

துலீப் கோப்பை 2023: புஜாரா, சூர்யகுமார், சர்ஃப்ராஸ் சொதப்பல்; பிசிசிஐ காட்டம்!

துலீப் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர்களான புஜாரா, சூர்யகுமார் யாதவ், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது பிசிசிஐயை அதிருப்தியடைய செய்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan July 13, 2023 • 20:12 PM
Pujara and Suryakumar got out cheaply; Sarfaraz Khan was duck in the Duleep Trophy final!
Pujara and Suryakumar got out cheaply; Sarfaraz Khan was duck in the Duleep Trophy final! (Image Source: Google)
Advertisement

துலீப் கோப்பை 2023 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணியும், மேற்கு மண்டல அணியும் மோதி வருகின்றன. பெங்களூரில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய தெற்கு மண்டல அணியில் ஓபனர் மயங்க் அகர்வால் 28 பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து 3,4 ஆகிய இடங்களில் களமிறங்கிய திலக் வர்மா 40, கேப்டன் ஹனுமா விஹாரி 63 ஆகியோரும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். பந்து வேகத்திற்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், சுழலுக்கும் நல்லமுறையில் ஒத்துழைப்பு கொடுத்தது. 

Trending


இதனால், மற்ற தெற்கு மண்டல அணி பேட்டர்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை. சச்சின் பேபி 7, ஃபொய் 9 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். மறுபக்கம் வாஷிங்டன் சுந்தர் 22 ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால், தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 213/10 ரன்களை மட்டும்தான் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய மேற்கு மண்டல அணியில் ஓபனர் பிரித்வி ஷா 65 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து, கேப்டன் பிரியங் பாஞ்சல் 11, ஹர்விக் தேசாய் 21, சேத்தேஸ்வர் புஜாரா 9 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், மேற்கு மண்டல அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.

அணி இப்படி தொடர்ந்து விக்கெட்களை இழந்தபோது களத்திற்குள் வந்த சூர்யகுமார் யாதவ், முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். அதன்பிறகும் தொடர்ந்து பெரிய ஷாட்டிற்குதான் சூர்யகுமார் யாதவ் முயற்சி செய்தார். அப்போது 8 ரன்கள் எடுத்திருந்தபோது, சூர்யகுமார் ஆட்டமிழந்தார். இந்த அழுத்தங்கள் காரணமாக சர்ஃப்ரஸ் கானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். தற்போது, ஷெத் 5 22, ஜடேஜா 4 ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். மேற்கு மண்ட அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 129/7 ரன்களை எடுத்து, 84 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து பிசிசிஐ தேர்வுக்குழுவினரும், நிர்வாகிகளும் ஆலோசனை நடத்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, சூர்யகுமார் யாதவ், சர்ஃப்ரஸ் கான் ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. துலீப் கோப்பை தொடரில் இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது.

ஆனால், துலீப் கோப்பை தொடரில் இவர்கள் மோசமாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதுபோல் அசால்ட்டாக விளையாடி ஆட்டமிழந்திருக்கிறார். இதுகுறித்து பிசிசிஐ மீட்டிங்கில் அஜித் அகார்கர் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டினாலும், இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்பு மிகமிக குறைவுதான் எனக் கருதப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement