Advertisement

ஐபிஎல் 2021: டெல்லி அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப் புயல்கள்!

இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2021 • 17:52 PM
Rabada, Nortje arrive at DC's team hotel
Rabada, Nortje arrive at DC's team hotel (Image Source: Google)
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வரும்  ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா ஆகியோர் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துள்ளனர். 

Trending


இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "அணியின் அனைத்து வீரர்களும் தற்போது பயிற்சியில் இணைந்துள்ளதால், இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 

கடந்தாண்டு இறுதி போட்டி வரை முன்னேறியும் எங்களால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முடியவில்லை. அதனால் நாங்கள் செய்த தவறுகளை சரிசெய்து இந்த சீசனில் நிச்சயம் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்று தெரிவித்தார். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக தனது முதலாவது லீக் போட்டியை விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement