
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் பாதிக்கப்பட்டு முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மந்தனா 80 ரன்னுடம், பூனம் ரவுத் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர் .
இதையடுத்து இரண்டாம் நாளில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். பூனம் ரவுத் 16 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். யஸ்திகா பாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். இந்திய அணி 101.5 ஓவரில் 276 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.