Advertisement
Advertisement

ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 29, 2024 • 12:20 PM
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி!
ENG vs PAK, 3rd T20I: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது டி20 போட்டி! (Image Source: Google)
Advertisement

 

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Trending


இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்றைய தினம் கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் மழை தொடர்ந்த காரணத்தால் இப்போட்டியும் டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement