
நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது எவ்வித பிரஷரும் இல்லாமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் அசத்தினார்கள்.
குறிப்பாக இளம் வீரர் ரஜத் பட்டிதாருடைய சிறப்பான ஆட்டம் காரணமாக விறுவிறுவென ரன்களை சேர்த்த பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை சேர்த்தது. இந்தப் போட்டியில் 54 பந்துகளை சந்தித்த அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 112 ரன்களை குவித்தார்.