Advertisement
Advertisement
Advertisement

பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய வீரர் ரமந்தீப் சிங் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 20, 2024 • 09:27 AM

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 20, 2024 • 09:27 AM

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Trending

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் ஏ அணியானது இறுதிவரை போராடிய நிலையிலும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அராஃபத் மின்ஹாஸ் 41 ரன்களையும், யாசிர் கான் 33 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அன்ஷுப் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய ஏ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர் ரமந்தீப் சிங் பவுண்டரி எல்லையில் தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் பவுண்டரிகளையும் தடுத்து அணியின் வெற்றியில் மிக முக்கிய காரணமாக அமைந்தார். அதிலும் குறிப்பாக ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ரமந்தீப் சிங் பவுண்டரி எல்லையில் அபாரமான டைவை அடித்து அற்புதமான கேட்ச்சை பிடித்த காணொளி ஒன்று ரசிகார்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி இன்னிங்ஸின் 9aஅவது ஓவரை வீச வந்த சுழற்பந்து வீச்சாளர் நிஷாந்த் சந்து, ஓவரின் முதல் பந்தை ஷார்டாக வீச அதனை எதிர்கொண்ட யாசிர் கான் லெக் திசையில் பெரிய ஷாட் ஆட முயன்றார். இருப்பினும், ராமன்தீப் ஓடி, பின்னர் டைவிங் செய்யும் போது ஒரு கையால் ஒரு ஆச்சரியமான கேட்சை எடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத யாசிர் கானும் ஒருகணம் என்ன நடந்தது என தெரியாமல் திகைத்தார். இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement