
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2022-23ஆம் ஆண்டுக்கான சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழ்நாடு - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் ஷோரே 67 ரன்களும், ஜாண்டி சிந்து 57 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் பிரன்ஷு விஜய்ரன்னும் அரைசதம் அடித்தார். பிரன்ஷு 58 ரன்கள் அடிக்க, லலித் யாதவ் 40 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 303 ரன்கள் அடித்தது.
அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணியில் பாபா அபரஜித் 57 மற்றும் பாபா இந்திரஜித் 71 ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். விஜய் சங்கர் 52 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பிரதோஷ் பால் மிகச்சிறப்பாக விளையாடி சதமடித்தார். அபாரமாக விளையாடிய பிரதோஷ் 124 ரன்களை குவித்ததன் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி.