
Ranji Trophy 2021-22: Baroda’s Vishnu Solanki scores century days after losing his daughter (Image Source: Google)
ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பரோடா, சண்டிகர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சண்டிகார் அணியில் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் மேனன் ஓரா 43 (45), ராஜ் பவா 32 (80), ஆகியோர் ரன்களை சேர்த்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 168/10 ரன்களை மட்டுமே சேர்த்தது. அபிமன்யூ ராஜ்புட் 5/47 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து பரோடா அணி முதல் இன்னிங்ஸ் களமிறங்கியது. ஓபனர் ஜியோத்ஸ்னில் சிங் 96 (185), ஒன் டவுன் வீரர் ப்ரத்யூஸ் குமார் 43 (130) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்திருந்தார்கள்.