
Ranji Trophy 2022, Day 2 : Tamil Nadu lead first innings (Image Source: Google)
கௌகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் முதல் 4 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - சாய் கிஷோர் ஜோடி தமிழக அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் வரை அற்புதமாக விளையாடியது.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3ஆவது சதமெடுத்து அசத்தினார் இந்திரஜித். அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாய் கிஷோர் 81 ரன்களிலும் ஷாருக் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது.
இதனால் முதல் நாள் முடிவில் தமிழக அணி, 72 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. ஜெகதீசன் 10, முகமது 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.