
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய நிலையில், இத்தொடரின் லீக் போட்டியில் உத்தரபிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. கான்பூரில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக தொடர்ந்து களமிறங்கிய உத்திரபிரதேசம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக சமர்த் சிங் 13 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மிரட்டிய பெங்கால் சார்பில் அதிகபட்சமாக முகமது கைஃப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே பெரிய சவாலை கொடுத்தார்.
குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து அச்சுறுத்தலை கொடுத்த அவருடைய வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சௌரவ் பால் 13, சுதீப் கராமி 0, கேப்டன் மனோஜ் திவாரி 3, மஜும்தார் 12, அபிஷேக் போரேல் 12 என முக்கிய பேட்ஸ்மேங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பெங்கால் 2ஆவது நாளிலும் துல்லியமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் வேகத்தில் ஷ்ரேயான்ஸ் கோஸ் 41, பிரதீபா பர்மனிக் 1, சிந்து ஜெய்ஸ்வால் 20 ரன்களில் அவுட்டானார்கள்.