
இந்தியாவின் முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. 38 அணிகளுக்கு இடையில் 19 போட்டிகள் தொடங்கின. ஒரு போட்டியில் அருணாச்சல பிரதேசம்- மணிப்பூர் அணிகள் மோதின. இதில் மணிப்பூர் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் கேரளா- மேகாலயா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேகாலயா 148 ரன்னில் சுருண்டது. பின்னர் கேரளா 9 விக்கெட் இழப்பிற்கு 505 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2ஆவது இன்னிங்சில் மேகாலயா 191 ரன்னில் சுருண்டது. இதனால் கேரளா இன்னிங்ஸ் மற்றும் 166 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜம்மு&காஷ்மீர்- புதுச்சேரி இடையிலான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் புதுச்சேரி 343 ரன்கள் சேர்த்தது. ஜம்மு-காஷ்மீர் 426 ரன்கள் குவித்தது. பின்னர் 2ஆவது இன்னிங்சில் புதுச்சேரி 124 ரன்கள் சுருண்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.