
Ranveer singh in IPL Closing ceremony (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த இறுதிப்போட்டிக்காக நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் தொடர் 15 ஆண்டுகளை தொட்டுள்ளதை கொண்டாடும் வகையிலும், இந்தியாவின் 75 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றை போற்றும் வகையிலும் இந்த நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக இந்த விழா தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை காண, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சுமார் 1, 32,000 பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். மத்திய அமைச்சர்கள், இந்திய கிரிக்கெட்டில் அனைத்து கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வந்திருந்தனர். எனவே இதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் போற்றும் வகையில் நடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.