Ranveer singh
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!
இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை.