
Rashid Latif's bold prediction on India vs Pakistan for Asia Cup title (Image Source: Google)
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதன் காரணமாக இத்தொடர் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளட்ட்து.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது, என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார்.