 
                                                    இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறியதும் நிலைமைகள் மாறியது. இதற்கு அடுத்து ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை விட நினைத்து பரிதாபமாக ஸ்டெம்பை பறிகொடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்து 13 ரன்களுக்கு வெளியேறினார். கில் வெளியேறிய அதே முறையில் புஜாராவும் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது குறித்து ரவி சாஸ்திரி தனது கருத்தை மிகவும் காட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி “முன்கால் பந்தை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் அது குறுக்கே சென்று விட்டதால் நிலைமை மோசமாகிவிட்டது. முதலில் புஜாரா அந்த பந்தை விளையாடலாமா என்று நினைத்தார். பின்னர் அதை விட்டு விடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அப்பொழுது ஆப் ஸ்டெம்ப் வெளியில் தெரிந்தது. அவரது கணிப்பு மிகத் தவறாக இருந்தது.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        