டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு - ராவி சாஸ்திரி ஓபன் டாக்!
டி20 உலகக் கோப்பையுடன் விலக எண்ணுவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவிதுள்ளார்.

Ravi Shastri Indicates Stepping Down After T20 World Cup (Image Source: Google)
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார் . அதன்பின் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம், டி20 உலகக் கோப்பையுடன் முடிவடையவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பையுடன் விலகவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைத்த அனைத்தையும் சாதித்துவிட்டேன். 5 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி, ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடர்களின் வெற்றிகள், இங்கிலாந்தில் பெற்ற வெற்றிகள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அனைத்து நாடுகளையும் அவர்கள் மண்ணில் தோற்கடித்தது... இதற்கு மேல் எதுவுமில்லை. டி20 உலகக் கோப்பையும் வெற்றி பெற்றால் மேலும் சிறப்பு. ஒன்றை நான் நம்புகிறேன் - கூடுதல் வரவேற்பினால் அதிக நாள்கள் தங்கக்கூடாது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்திய அணியில் நான் சாதிக்க நினைத்ததை விடவும் கூடுதலாகச் சாதித்துவிட்டேன். இது முடிவுபெறுகிறது என்பதில் வருத்தம் தான். அற்புதமான வீரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஓய்வறையில் அருமையாக நேரங்களைக் கழித்தோம். நாங்கள் வெளிப்படுத்திய தரமும் ஆட்ட முடிவுகளும் அற்புதமான பயணமாக அமைந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News