
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய வேளையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்தது.
அதனை தொடர்ந்து பும்ரா தலைமையிலான மூன்றாம் தர இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்தியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் பெரும்பாலானோர் உலக கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.