Advertisement

இந்திய அணிக்கு இருக்கும் ஒரு புதிர் இதுதான் - அஸ்வின்!

ஆறு விக்கெட்டுகளை இழந்து, 30 பந்தில் 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், அதுபோன்ற ஆட்டங்களையும் முடித்து வைக்கும் அளவுக்கு எட்டாம் இடத்தில் உங்களுக்கு ஒரு ஆள் வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 15, 2023 • 14:43 PM
இந்திய அணிக்கு இருக்கும் ஒரு புதிர் இதுதான் - அஸ்வின்!
இந்திய அணிக்கு இருக்கும் ஒரு புதிர் இதுதான் - அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டி20 தொடரை இழந்திருக்கிறது. இந்த தோல்விக்கு அணி தேர்வு மற்றும் ஆன்பீல்ட் கேப்டன்சி இரண்டும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தொடரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சுழற் பந்துவீச்சில் ஆட்டத்தை சாகல் திருப்பித் தர, அவரையோ அக்சர் படேலையோ மேற்கொண்டு பந்துவீச்சுக்கு பயன்படுத்தாமல் ஹர்திக் பாண்டியா வேகபந்துவீச்சாளர்களிடம் சென்று தோற்றார். 

இதனால் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று வலிமையான முன்னிலையை பெற்றது வெஸ்ட் இண்டீஸ். மேலும் பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாக மாற்றி மாற்றி பயன்படுத்துவதில் அவருக்கு பெரிய குழப்பம் இருந்தது. இதையடுத்து இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பேட்டிங் வரிசை நம்பர் ஏழுடன் முடிவது இருந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வென்று இருக்க வேண்டிய நிலையில் இருந்து சில விக்கட்டுகளை விட்டது. இதன் காரணமாக நம்பர் எட்டில் இருந்த பேட்ஸ்மேன் ஆட்டத்தை முடிக்க வேண்டிய தேவை இருந்தது. 

Trending


ஆனால் அந்த இடத்தில் பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தால் ஆட்டம் கையை விட்டு போய்விட்டது. இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் கவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “இங்குள்ள எங்கள் அணியை பொருத்தவரை சில நெகழ்வுத்தன்மைகளை அனுமதிக்காத அளவுக்கு இருந்தது. ஆனால் முன்னோக்கிச் செல்லும் பொழுது நாம் சிறப்பாக செயல்பட்டாக வேண்டிய சில பகுதிகளை பார்க்க வேண்டும். எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் ஆழத்தை கண்டறிய வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

எங்களால் முடிந்ததை நாங்கள் மிகச் சிறப்பாக செய்யவே முயற்சி செய்கிறோம். ஆனாலும் பேட்டிங் ஆழம் என்பது நாம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான ஒரு பகுதியாகும். பேட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழம் இருப்பதை உறுதி செய்ய நாம் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். நம்முடைய பேட்டிங் வரிசையில் அவ்வளவு சீக்கிரத்தில் பந்து வீச்சாளர்கள் வரக்கூடிய வகையில் இருப்பதை நாம் விரும்ப மாட்டோம். 

ஷர்துல் தாக்கூர் போன்ற ஒருவர் எட்டாம் இடத்தில் வந்து பந்துகளை அடித்து நொறுக்க வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற உங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் விளையாடியாக வேண்டும். அதேசமயம் நீங்கள் ஆறு விக்கெட்டுகளை இழந்து, 30 பந்தில் 36 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், அதுபோன்ற ஆட்டங்களையும் முடித்து வைக்கும் அளவுக்கு எட்டாம் இடத்தில் உங்களுக்கு ஒரு ஆள் வேண்டும். ஆசியா மற்றும் உலக கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு இருக்கும் ஒரு புதிர் இதுதான். குல்தீப் மற்றும் சாகல் இருவரும் ஒரே அணியில் இருந்தால் எட்டாவது இடத்தில் குல்தீப்தான் வருவார். இதில் மாற்றம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement