
மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபார பந்துவீச்சாலும், ரச்சின் ரவீந்திராவின் அபாரமான பேட்டிங்காலும் வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் இப்போட்டியியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய ரச்சின் ரவீந்திரா சில் சாதனைகளை படைத்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்ததன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார். முன்னதாக ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் அவர் அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்ததுடன், அத்தொடரில் மூன்று சதங்களைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக சதமடித்த நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.