
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி, தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாச் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உம்ரான் மாலிக் விளையாடும் அணியில் வாய்ப்பு பெற்றார். முகேஷ் குமார் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை வீழ்த்தினார், இரண்டாவது விக்கட்டை தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டாக முகேஷ் குமார் வீழ்த்தினார். மூன்றாவது விக்கெட்டை ஷர்துல் வீழ்த்தினார்.