
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக அமைந்த போதும், மிடில் ஆர்டர் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரின் டாப் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் ஏமாற்றியதால் சொற்ப ரன்களுக்கு இந்திய அணி அவுட்டானது. கடைசி ஒருநாள் போட்டியில் கூட தீபக் சஹாரால் இந்திய அணி தப்பித்தது.
இந்நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினையை தீர்க்க தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், ரவீந்திர ஜடேஜா 6ஆவது வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடுகிறார். 5ஆவது வீரராக கூட அவரால் சோபிக்க முடியும். ஏனென்றால் அவர் தனது மூளையை பயன்படுத்தி விளையாடுகிறார், சிறுபிள்ளைகளை போல இஷ்டத்திற்கு சுற்றமாட்டார்.