
இலங்கையில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் போர் சுற்றின் கடைசி போட்டியானது இன்று கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியானது ஷாகிப் அல் ஹசன், தாஹித் ஹிரிடோய் ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களையும், தாஹித் ஹிரிடோய் 54 ரன்களௌயும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.அந்த வகையில் இன்றைய போட்டியில் பத்து ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா 1 மெய்டன் உட்பட 53 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் வங்கதேச வீரரான ஷமீம் ஹுசேன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.