
நடந்து முடிந்த 16 வது சீசன் ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றி, அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை வைத்திருந்த மும்பை அணியின் சாதனையைச் சமன் செய்தது. இதற்கு முந்தைய வருட ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தனிப்பட்ட முறையில் மிக மோசமான செயல்பாட்டை கொண்டு இருந்து நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.
அந்த வருட ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் ஜடேஜா கேப்டனாக இருக்க மகேந்திர சிங் தோனி வழிவிட்டு தாமாக நகர்ந்தார். ஆனால் தொடரின் நடுப்பகுதியில் மீண்டும் மகேந்திர சிங் டோனி கேப்டனாக வர ஜடேஜா அணியை விட்டு வெளியேறி இருந்தார்.
இதனால் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனைகள் போய்க்கொண்டிருப்பதாக செய்திகள் பரவின. அதற்கேற்றார் போல் ஜடேஜாவின் நடவடிக்கைகளும் அமைந்தன. மேலும் நடப்பு தொடரில் ரசிகர்கள் தோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை பிடித்ததும், அதற்கு ஜடேஜா தன்னுடைய வருத்தத்தை வெளிப்படையாக ட்விட்டரில் காட்டியதும் நடந்தது.