Advertisement

ஐபிஎல் 2023: ஃபாஃப் டூ பிளெசிஸுக்கு அபராதம்; ஆவேஷ் கானுக்கு தண்டனை!

ஆவேஷ் கான், கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து ஹெல்மெட்டை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்தது அவருக்கே ஆபத்தாக முடிந்திருக்கிறது. தகாத முறையில் வெற்றியை கொண்டாடியதாக உரிய நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan April 11, 2023 • 12:12 PM
RCB Captain Faf Du Plessis Fined Rs 12 Lakhs For Slow Over-Rate, Lsg's Avesh Khan Reprimanded
RCB Captain Faf Du Plessis Fined Rs 12 Lakhs For Slow Over-Rate, Lsg's Avesh Khan Reprimanded (Image Source: Google)
Advertisement

பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பல்வேறு பரபரப்புகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் சில சங்கடங்களும் நிறைந்ததாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இது ஆரம்பத்திலேயே லக்னோ அணிக்கு மிகப்பெரிய அழுத்தமாக அமைந்தது. 213 ரன்கள் இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என்றாலும் மனம் தளராத லக்னோ அணி களமிறங்கியபோது, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் பறிபோயின.

அதன் பிறகு உள்ளே வந்த ஸ்டாய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தங்களது அதிவேக பேட்டிங்கில் ரன்குவித்து ஆட்டத்தை மொத்தமாக லக்னோ அணியின் பக்கம் திருப்பினர். கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது, ஐந்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து சமன் செய்தது லக்னோ.

Trending


கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டபோது, பல்வேறு திறப்பு முனைகள் நடந்தன. பேட்டிங் செய்த ஆவேஸ் கான் பந்தை அடிக்க முடியவில்லை. கீப்பர் வசம் பந்து சென்றது. அதை தட்டுத்தடுமாறி பிடித்ததால், பந்தை தூக்கி எறிவதற்குமுன் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் ஒரு ரன் ஓடிவிட்டனர். அந்த ரன்னை எடுத்து முடித்தவுடன் ஆவேஸ் கான் ஆக்ரோஷமாக ஹெல்மெட்டை தூக்கி கீழே எரிந்து கொண்டாடினார். 

இது தகாத முறையாக இருந்ததால் பிசிசிஐ இவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஐபிஎல் விதிப்படி இந்த கொண்டாட்டம் வெறுப்பை தூண்டும் விதமாக இருக்கிறது. ஆகையால் லெவல் 1 விதிப்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை களத்தில் இருந்த நடுவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபஃப் டூ பிளெசிஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் கொடுக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் டு பிளெசிஸ் மீதும் முதல் பாய்ந்துள்ளது. மேலும் இரண்டு முறை இது நீடித்தால் அணியின் கேப்டன் குறைந்தது ஒரு போட்டியில் விளையாட முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும். இப்போது அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 12 லட்சம் அபராதம் மட்டுமே விதக்கப்பட்டிருக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement