
RCB Missed Harshal Patel Against CSK, Says Faf du Plessis (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 95* ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர்.