
ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று இரு அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. கான்வே மற்றும் சிவம் துபே இருவரும் அரைசதம் அடித்தார்கள்.
மிகப்பெரிய சாதனை இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறும் தூரத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இறுதியில் எட்டு ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வியை சந்திக்க வேண்டியதாக அமைந்துவிட்டது.
போட்டியின் முடிவுக்கு பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “நீங்கள் பெங்களூருக்கு வந்தால் நல்ல விக்கெட்தான் இருக்கும். அதேபோல் ஐபிஎல் தொடரில் பனிப்பொழிவும் அதிகம். எனவே நீங்கள் நன்றாக தொடங்க விரும்புகிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் விளையாடுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் பொழுது உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும். இதைக் கடந்து சென்று, அதற்குப் பிறகு வேகமாக ரண்களுக்கு போக வேண்டும்.
நாங்கள் இந்த திட்டத்தை எளிமையாக வைத்து, பேட்டிங் இரண்டாவது பகுதியில் ரண்களுக்கு விரைவாக போக முயற்சி செய்தோம்.