பிபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் இனி மெல்போர்னில் - தகவல்!
அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக் பேஷ் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை மெல்போர்னில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் மெல்போர்ன் ஸ்டார்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியைச் சேர்த்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
பலத்த பயோ பபுள் சூழலில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, சக வீரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொடரும் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு பிக் பேஷ் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தையும் மெல்போர்னில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி எம்சிஜி, மார்வல் மைதானம், செயிண்ட் கில்டா கிரிக்கெட் மைதானம், ஜிஎம்எச்பிஏ மைதானம் ஆகியவற்றில் எஞ்சியுள்ள பிக் பேஷ் போட்டிகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now