Advertisement

இந்த தொடரில் சுதந்திரமாக விளையாடவுள்ளேன் - விராட் கோலி ஓபன் டாக்!

இந்த தொடரில் பொறுப்புகள் இல்லாமல், எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளேன் என ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 22, 2022 • 16:55 PM
'Renewed' Virat Kohli 'Off From A Lot Of Responsibilities And Duties' Ahead Of IPL 2022
'Renewed' Virat Kohli 'Off From A Lot Of Responsibilities And Duties' Ahead Of IPL 2022 (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15வது சீசனில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. இந்த நிலையில், மும்பைக்கு சென்றுள்ள பெங்களூரு அணி வீரர்கள், அங்கு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். திருமணம் காரணமாக மேக்ஸ்வெல் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வரவில்லை.

இதனால் மாற்று திட்டத்துடன் பெங்களூரு அணி முதல் சில போட்டியில் கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் டு பிளெஸிஸ் புதிய கேப்டனாக களமிறங்குகிறார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். கேஎஸ் பரத், படிக்கல் , சாஹல் ஆகியோர் வேறு அணிக்கு சென்றுவிட, பெங்களூரு அணி புதிய அணியை கட்டமைத்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Trending


இதனால் அனுபவம் இல்லாத அணியை வைத்து தான் ஆர்சிபி இம்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக உள்ளார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு நேற்று தான் அணியின் பயிற்சி முகாம்க்கு கோலி திரும்பினார். 

அப்போது பேசிய விராட் கோலி, “இந்த தொடரில் பொறுப்புகள் இல்லாமல், எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளேன்.

என்னுடை வாழ்க்கையை நான் மிகவும் நெசிக்கிறேன். எனக்கு குடும்பமும் வந்துவிட்டது. அழகான மகள் உள்ளார். அவர் வளர்வதை பார்த்து ஜாலியாக இருக்கிறேன், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுகிறேன், அதே சமயம் எனக்கு பிடித்த கிரிக்கெட்டையும் விளையாடுகிறேன். நல்ல மனநிலையில் இருப்பதால் இம்முறை நன்கு ரன் குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

பெங்களூரு அணியை பொறுத்தவரை, டு பிளெஸில் நல்ல அனுபவ வீரர். அவரை கேப்டனாக்க வேண்டும் என்று தான் அவரை ஏலத்தில் எடுத்தோம். டு பிளெஸிஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இம்முறை அவர் பல சாதனைகளை புரிவார் என நம்புகிறேன். ஆர்சிபி அணிக்கு எப்போதும் போல் உறுதுணையாக இருப்பேன். பேட்டிங்கில் ஜொலிப்பேன் என்ற நம்பிக்கையும் உள்ளது” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement