
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 22) வதோதராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் அசத்தலான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஸைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனிகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எஃபி பிளெட்சர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்று அசத்தினார்.