
சிஎஸ்கே நிர்வாகத்திடம் ஜடேஜா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஜடேஜா வேறு அணிக்கு விளையாடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஏலத்திற்கு முன்பே ஜடேஜா வேறு அணிக்கு டிரேட் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஜடேஜாவுக்கு சூப்பர் கிங்ஸ் அணி கிடுக்கு பிடி ஒன்றை போட்டுள்ளது. இதன் மூலம் ஜடேஜாவால் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது ஐபிஎல் மினி ஏலம் நடப்பாண்டு டிசம்பரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முன்பே ஜடேஜாவை சிஎஸ்கே அணி ட்ரேட் செய்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் இன்னொரு ஐபிஎல் அணி ஜடேஜாவை தங்கள் அணிக்கு அனுப்ப சிஎஸ்கே விடம் அணுகியது. இதற்கு சிஎஸ்கே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜடேஜாவை டிரேட் செய்யும் முடிவு இல்லை என்றும் சிஎஸ்கே திட்டவட்டமாக அறிவித்து.