
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அசோசியேஷனின் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த அணியில் அஸ்வினும் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி ‘சூப்பர் 12’ குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் உள்ளது. இரு அணிகளும் வரும் 23ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளன. இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் அதிகம் கிரிக்கெட் விளையாடுவதில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை குறித்து சொல்ல வேண்டாம். அது இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தில் வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒரு பகுதி. டி20 ஃபார்மெட்டில் வெற்றி தோல்விக்கான மார்ஜின் மிகவும் குளோஸாக இருக்கும். நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அதேபோல தான் அவர்களும்.