
இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷாஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளும் மிகப் பரபரப்பானதாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி இறுதி நேரத்தில் வென்று அசத்தியது.
தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி மிகவும் பலமான முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தனி ஒரு வீரராக 155 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் பக்கம் கொண்டு வந்தார். ஆனால் அவர் ஆட்டம் இழக்க எல்லாம் மொத்தமாக மாறியது.
இதற்கு முன்பு இதே போல 2019 ஆம் ஆண்டு கடைசி விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு மிக அபாரமாக விளையாடி சதம் அடித்து ஒரு போட்டியை வென்று கொடுத்து தொடரை சமனாகவும் உதவினார். அந்த ஆட்டத்தை இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஞாபகப்படுத்துவதாக அமைந்தது.