Advertisement
Advertisement
Advertisement

சூர்யகுமார் யாதவை பிரதான அணியில் சேர்த்திருக்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பிரதான பட்டியலில் அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவுக்கு இடமளித்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கருத்து தெரிவித்துள்ளாா்.

Advertisement
Ricky Ponting surprised with Suryakumar's exclusion from WTC squad!
Ricky Ponting surprised with Suryakumar's exclusion from WTC squad! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2023 • 12:45 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற அணிகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 20, 2023 • 12:45 PM

அடுத்த மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

Trending

இதற்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா, ரஹானே, ஷுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ் கூடுதல் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பிரதான பட்டியலில் அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவுக்கு இடமளித்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கருத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பேசிய பாண்டிங், “இந்தியாவின் பிரதான வீரா்கள் பட்டியலில் சூா்யகுமாா் யாதவ் இல்லாதது எனக்கு ஆச்சா்யமே. டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காத பட்சத்தில், ரிஷப் பந்த் போல அவரும் அதிரடியாக ஆடக் கூடிய வீரா். அவரையும் பிரதான அணியில் சோ்த்திருக்க வேண்டும்.

கே.எல்.ராகுல் காயமடைந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக இஷான் கிஷண் சோ்க்கப்பட்டது சரியான முடிவு. அவா் ரிஷப் பந்த் போலவே விக்கெட் கீப்பிங், பேட்டிங் செய்யக் கூடியவா். சூா்யகுமாா், இஷான் என இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், அவா்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அத்தகைய ஆட்டமே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியாவும் நிச்சயம் ஆக்ரோஷமான ஆட்டத்தையே வெளிப்படுத்தும். இங்கிலாந்து ஆடுகளமானது, ஏறத்தாழ ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மையைக் கொண்டதாக இருப்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு இது சற்று சாதகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement